காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர்:

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் மத்தியில் குழப்பம் விளைவிக்க காதியானி வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள். அண்மைக் காலமாக சென்னை, மேலப்பாளையத்தை அடுத்து தற்போது கோவையில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக 10/06/2012 அன்று தினதந்தி கோவை பதிப்பில் முழு பக்க அளவில் கலரில்விளம்பரம் ஒன்றை வெளியிட்டு, தங்களுடைய மதத்திற்கான விஷம பிரசாரத்தை தொடங்கி உள்ளார்கள்.

அல்லாஹ்வின் மீதும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழும் முஸ்லிம்களை, இறைமறுப்பாளர்களாக ஆக்க துடிக்கும் இஸ்லாத்தின் கடும் பகைவர்களான காதியானிகளின் அசத்திய பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

காதியானிகளின் தலைவன் குலாம் என்பவன் தன்னை இறுதி நபி என்பதாக வாதிட்டு வந்தான். இந்நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் பிடி வாரண்ட் ஒன்றை அவனுக்கெதிராக பிறப்பித்தது. அதனால் தலைமறைவாகிய குலாம் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பியோடினான்.

இவனுக்கு அடைக்களம் கொடுத்த அந்த நாடுகள் இஸ்லாத்தை பிளவு படுத்தும் நோக்குடன் அவனுடைய கொள்கைகளை பாகிஸ்தான் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பரப்பி அதை நம்பக் கூடிய பெரியதொரு கூட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த வகையில் மேலோட்டமாக இந்த காதியானிகளை பார்க்கும் போது முஸ்லிம் பெயர்களை வைத்து முஸ்லிம்கள் போலவே நடப்பர். ஹராம் ஹலால் முதல் அத்தனை விஷயங்களையும் பேசுவர். ஆனால் நடைமுறையில் தனிநபர் வழிபாடுகளை கொண்டவர்களாக விளங்குவர். மேலும் இந்தக் கூட்டம் இறுதி நபியாக குலாம் என்பவனையே நம்புகின்றனர். இந்த விசுவாசத்தை ஏற்படுத்த சில நாடுகள் கோடிக்காணக்கான நிதிகளை வாரி வழங்குகின்றன.

ஆங்கிலேயர்கள் செய்த முக்கிய சதித்திட்டங்களில் ஒன்றுதான் முஸ்லிம்களை வீழ்த்த முஸ்லிம்களின் பெயரில் உள்ள ஒருவனை உருவாக்க வேண்டும் என்பதாகும். அப்படி யாராவது ஒருவன் கிடைத்தால் கூட அவன் விரும்பும் பணம் பொருள் பதவியால் இப்படி எல்லாமே தரத் தயாராயிருந்தனர். அவர்கள் இப்படி சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பஞ்சாபிலிருந்து முஸ்லிம் பெயர் கொண்ட ஒரு குடும்பம் பணம் பதவிக்காக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட முன்வந்தது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்களின் வருகை முத்திரையிடப்பட்டு முற்றுப்பெற்றுவிட்டது என்பதுதான் குர்ஆன் கூறும் உண்மையாகும். இதை திருக்குர்ஆன் வசனம் 33:40 ல் (மக்களே) முஹம்மது உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தை அல்லர். ஆனால், அவர் அல்லாஹுவின் தூதராகவும், இறுதி (முத்திரை) நபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். என தெள்ளத்தெளிவாக நேரடியாக உறுதிப்படுத்துகிறது. நபி (ஸல்) அவர்களும் தனக்குப் பின்னர் நபி அனுப்பப்படமாட்டார் என்பதைப் பல கட்டங்களில், பல சந்தர்ப்பங்களில் கூறி உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் இந்த குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சுய விளக்கங்கள் கொடுத்து காதியானிகள் நிராகரிக்கின்றனர்.

காதியானிகள் எந்த அளவு மூடர்களாகவும்,வழிகேடர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் அல்குர்ஆன் வசனங்களுக்கு கொடுக்கும் சுய விளக்கங்களே போதிய சான்றாகும். அல்குர்ஆன் ஸஃப்:6-ல் மர்யமின் குமாரர் ஈஸா, ”இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் அஹமது‘ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்ற இறைவாக்கில் கூறப்படும் அஹ்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த குலாம் அஹ்மதையே குறிக்கிறது என்பது காதியானிகளின் பிதற்றலாகும். சிறிது அளவே சுய சிந்தனை இருந்தால் கூட அவர்கள் இப்படி பிதற்ற முடியாது.

இறுதி நபியாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகிய அஹ்மது என்ற பெயரைக் கொண்டு தங்களை ‘அஹ்மதிகள்’ என அழைப்பது மக்களை ஏமாற்ற ‘காதியானிகள்’ செய்யும் ஒரு தந்திரமாகும்.

மிர்சா குலாம் அஹமத் தன்னை ‘நபி’ என்று மட்டுமல்ல, தானே ‘ஏசுவின் மறு வருகை’ என்றும் தானே ‘மாஸீஹ் மவ்ஊத்’(வாக்களிப்பட்ட மஸீஹ்) என்றும், தானே ‘கல்கி’ அவதாரம் என்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டார்.தொடக்கத்தில் தன்னை ‘நிழல் நபி’ என்று அழைத்துக் கொண்டார், போகப் போக ,தானே நபி’என்றும் வாதிடத் தொடங்கினார். இவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு உதவியது போல் இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்க பல ஆதிக்க வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள்.

காதியானிகளின் திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். காதியானி என்பது ஒரு தனி மதமாகும். ஆனால் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்த காதியானிகளும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இதன் பின்னணியில் இருப்பது பிரிட்டிஷ் அரசு. காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது என்பதும் அதன் கிளை அலுவலகம் ஒன்று இஸ்ரேலில் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. காதியானிகள் காபிர்கள் என்பதாக மார்க்க அறிஞர்களால் பத்வா வழங்கப்பட்டுள்ளது.

காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்பது மட்டுமன்று இஸ்லாத்தின் கடும் பகைவர்கள் என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்த வேண்டும்.