தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி: எச்சரிக்கை

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. 

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து
காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...

முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில தலைவர் சகோ.சலீம் M.Sc.,B.ed.,PGDSA., அவர்களுக்கு, கோவை சாந்தி ஆஷ்ரமம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை, இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணியாற்றியது, இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது ஆகிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

கோவை சாந்தி 
ஆஸ்ரமத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, 
கல்வி, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல் , சுகாதாரம், போன்ற 25 துறைகளில் சிறந்து  விளங்கிய நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சகோ.சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆஸ்ரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமருகுரு கல்லூரியில்  நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

ரமழானும் நடைமுறை வாழ்வும் - நேர்காணல்


தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளரும் நாவன்மை மிக்க பேச்சாளருமாகிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'ரமழானும் நடைமுறை வாழ்வும்' என்ற தலைப்பில் அல்ஹஸனாத்துக்கு வழங்கிய நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.