குர்ஆனியத் தோட்டம்

          உலகத்தின் குர்ஆனியத்தோட்டம் 
(Qur'anic Botanical Garden ) வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில் (தோஹா) உருவாகிறது.


எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேசன் சிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் இந்த இஸ்லாமியத் தோட்டம் அமைவதின் மூலம் உலக கல்வி மையங்களுக்கும், ஆராய்ச்சி மையங்களுக்கும் இது மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலர் தினம் சீரழிவு ;


காதலர் தினம் போன்ற தினங்களை கொண்டாட பன்னாட்டு நிறுவனங்களால் ஊக்கப்படுத்தப்படுவதன் நோக்கத்தை புரிந்து கொள்வோம். அன்பும், ஒழுக்க விழுமங்களும் பன்னாட்டு நிறுவனங்களால் வணிகமயமாக்கப்பட்டு, அதன் மூலம் இளைய சமூகம் சீரழிவுப் பாதையில் அழைத்து செல்லப் படுவதை 

எதிர்ப்போம் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ( எஸ்.ஐ.ஓ) அழைப்பு விடுத்துள்ளது.

சுவாமி அசிமானந்தா Vs அப்துல் கலீம்



     தீவிரவாதத்தை இஸ்லாம் உருவாக்கவில்லை என்னும் செய்தியை மக்களிடம் சேர்ப்பிப்பது தான் தனது முக்கியப்  பணி, என 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் உண்மைச் சம்பவங்களை  வெளியே கொண்டுவர காரணமாக மாறிய அப்துல் கலீம் கூறினார். கலீமின்  மாசற்ற உள்ளத்தையும் நிரபராதி என்பதையும் உணர்ந்து, குண்டு வெடிப்புக்குப் பின்னால் செயல்பட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சுவாமி அசிமானந்தா விசாரணைக் குழுவிடம் உண்மையை ஒப்புக் கொண்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி - உறுப்பினர்கள் முகாம்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக உறுப்பினர்களின் இரு நாள் பயிற்சி முகாம் ஜனவரி 29,30 ஆகிய தேதிகளில் வாணியம்பாடியில் நடைபெற்றது.  முதல் நாள் காலை சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரமபமானது.  ஜ.இ.ஹி. மதுரை தலைவர் மெளலவி. மொஹ்யித்தின் குட்டி உமரி அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார்கள்.  அவரை தொடர்ந்து ஜ.இ.ஹி-ன் தமிழ் மாநில துணைத்தலைவர் அவர்களின் முகாமிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.  ஜ.இ.ஹி-ன் மாநில தலைவர் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.

TMMK - பொதுக் குழு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொதுக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 29,2011) கிழக்கு தாம்பரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்றது.
முன்னதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) அன்று தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னை மன்னடியில் உள்ள ஆயிஷா மகாலில் நடைபெற்றது.

TNTJ - பொதுக்குழு


2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்ததாவது:

முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை.