திருவிடைச்சேரி

 திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் கடந்த 05-09-2010 அன்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை தொடர்பான வாக்குவாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வானது அமைதியையும் சகிப்புத் தன்மையையும் கொண்ட இஸ்லாத்தைப் பின்பற்றும் தமிழக முஸ்லிம்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியச் செய்துள்ளது. புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமளான் மாத்தின் கண்ணியமிக்க இறுதிப்பத்து நாட்களில் வருகின்ற மாட்சிமிக்க இரவை ( லைலத்துல்கத்ர்),

சஹர் நேர நிகழ்ச்சி...,-- ஆளூர் ஷான்வாஸ்

ரமளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது. தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும்,

வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை

”வாழ்க்கையில் முன்னேற, “டிவி’ சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,” என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார்.

வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும்.

ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……!


இஸ்லாமிய நூல்கள் படிக்க ஆர்வம் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக உள்ள சூழ்நிலையில், ஊரில் நூலகமும் இல்லையேஎன்று ஏங்கும் ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……!
ஆலிம் பெருமக்களின் இல்லம் தேடி அஞ்சல் வழியில் இஸ்லாமிய நூல்களை இலவசமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் அகாடமி செய்துள்ளது.
ரமளான் மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.

தொழுகை






"உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது"
                                                                                                               (திருக்குர்ஆன் 4:103)





"குறித்த நேரத்தில் தொழும் தொழுகைதான் அல்லாஹுவிற்கு மிகவும் பிடித்த தொழுகையாகும்."

(ஆதாரம் : முஸ்லிம் )



"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுதால் 27 மடங்கு நன்மை அதிகம் உண்டு"
                                                                                                                    (ஆதாரம் : புஹாரி)




"திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்; அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கிறார்கள்"

(திருக்குர்ஆன் 23:1,2)



"நீங்கள் தொழும்போது அதுவே உங்களுடைய கடைசித் தொழுகையாக இருக்கக்கூடும் என நினைத்துத் தொழுங்கள்"

 (ஆதாரம் : அஹ்மத்)