SIO REFORMATION CUP -2010


Inter Zone Football Tournament
Dec 22-25, At Mangalore,Karnataka

                              Team SIO Tamilnadu
கர்நாடக மாநில மங்களூரில்  இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ். ஐ .ஓ) புணரமைப்புக் கோப்பை கால்பந்து போட்டி  'டிசம்பர் 23  அன்று துவங்கியது
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கு பெற்றுள்ளன இப்போட்டியில்
எஸ். ஐ .ஓ, தமிழ்நாடு அணி கால்பந்து வீரர்களும் கலந்து கொண்டனர். 
தேசிய அளவிலான ஐந்து நாள் கால்பந்து போட்டியின் துவக்க விழாவின் கொடியேற்றி எஸ். ஐ .ஓ, அகில இந்திய தலைவர் சுஹைல் பேசுகையில்;

விளையாட்டுப் போட்டிகள் என்பது பொழுது போக்குக்காக மட்டுமல்ல, புணரமைப்புக்கான முக்கிய பங்கு விளையாட்டுக்கு உண்டு, உரை, முழக்கம், பேரணி போன்றவற்றால் மட்டும் சமுதாயத்தில் மறுமலர்ச்சி கொண்டு வர முடியாது.சமூக வாழ்க்கையில் இறை பக்தியுடன் கூடிய ஆரோக்கியமான இளைஞர்கள் நமக்கு தேவையாக உள்ளது. மேலும் அவர் கூறுகையில் எஸ். ஐ .ஓ, வரலாற்றில் முதன் முதலாக இத்தகைய போட்டி பல்வேறு துறைகளில் உள்ளவர்களையும் ஒருங்கிணைக்கும் முகமாக நடைபெறுகிறது, 

சிறப்பு விருந்தினர் Dr . ஹபீப் ரஹ்மான் கூறும் போது; ''இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை விட்டு தடுக்ககூடிய சாதனம் இத்தகைய விளையாட்டு போட்டி" என்று கூறினார்,
டிசெம்பர் 26 அன்று நடந்தகேரளா & வெஸ்ட் பெங்கால் அணிகள் இறுதி போட்டியில் மோதியது
ஒரு கோல் அடித்து கேரளா எஸ். ஐ .ஓ,அணி கோப்பையை வென்றது.