ஊழலின் ஊற்றை அடைக்க...உரத்த சிந்தனை

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
துணைத் தலைவர்இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததைக் குறித்துபலரும் பல கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். "உண்ணாவிரதம் இருந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா... சட்டங்களால் ஊழலை ஒழித்துவிட முடியுமா...
என்றெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களும் இருக்கின்றன. "அவர் வகுப்புவாத முகமூடி அணிந்து வருபவர்இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு, 85 லட்சம் ரூபாய். அதை யார் கொடுத்தது?' என்றெல்லாம் கேட்கின்றனர். இருந்தாலும்அவர் மக்களின் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு முன்யார் இந்த ஊழலைப் பற்றி பேசினர்?

ஒரு பட்டா வாங்குவதற்கு, 20 ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர். மின் இணைப்பு வழங்க, 10 ஆயிரம் கேட்கின்றனர். இத்தனை கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதைப் பற்றியெல்லாம் எந்தத் தலைவர் பேசினார்ஹசாரே பேசினார். மக்கள்அவருக்குப் பின்னால் அணி திரண்டனர். ஆகவேஅவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும்ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்காகஅவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இப்போது கேள்விசட்டங்களால் ஊழல் ஒழிந்துவிடுமாஇதற்குத் தீர்வாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்... "எல்லாரும் மாறவேண்டும்எல்லாமும் மாற வேண்டும்...எல்லாரும் என்றால்பொதுமக்கள் மாறவேண்டும்அரசியல்வாதி மாறவேண்டும்அதிகாரிகள் மாறவேண்டும்ஆன்மிகவாதிகள் மாறவேண்டும்ஊடகங்கள் மாறவேண்டும். இப்படிஎல்லாரும் மாறினால்ஊழல் ஒழிவதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்று பெரிய ஊழல்வாதி பொதுமக்கள் தான். ஊழலை எதிர்க்கிற பொதுமக்கள்நேர்மையாக நடந்துகொள்கின்றனராபுறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப்போடுவது யார்கோவில் நிலத்தைவக்ப் சொத்தை எல்லாம் வளைத்துப்போட்டு வாழ்வது யார்குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துமனைகளாக ஆக்கியவர்கள் யார்வெள்ளம் வீட்டுக்கு வராமலேயேவெள்ள நிவாரண நிதி வாங்குபவர்கள் யார்மக்கள் எந்த வகையில் நேர்மையானவர்களாக இருக்கின்றனர்இரட்டை நிலையை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இவர்கள்மற்றவர்களின் நேர்மையைப் பற்றி பேசுகின்றனர்தங்களின் நேர்மையைப் பற்றி கவலைப்படுவது இல்லை. "ஊழல் ஊழல்என்பர். தங்கள் வீட்டில் ஒருவர் அதிகாரியாகவோஅரசியல்வாதியாகவோ இருந்துமுறைகேடாக சம்பாதிக்காமல் இருந்தால்அவரை, "பிழைக்கத் தெரியாதவன்என்பர். சிலருக்குலஞ்சம் வாங்காத அதிகாரிகளைக் கண்டாலே பிடிக்காது. "முன்னாடி இருந்தவர்கிட்டேகாசை கொடுத்தா வேலையை முடிச்சிடலாம். இப்ப ஒருத்தன் வந்திருக்கான். காசே வாங்க மாட்டேன்கிறான். சரியான சாவுகிராக்கிஎன்று சொல்லக்கூடியவர்கள் இருக்கின்றனராஇல்லையாலஞ்சம் இரண்டு வகை. ஒன்றுதவிர்க்க முடிந்த லஞ்சம். இரண்டுதவிர்க்க முடியாத லஞ்சம். சில விஷயங்களில்லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டியுள்ளது. இல்லையென்றால்காலமெல்லாம் உங்கள் வீட்டுக்கு மின்சாரமே வராதுதண்ணீர் வராதுஇது போராடி முடியாது. பல விஷயங்கள் தவிர்க்க முடிந்தவை. காருக்கு,"பேன்ஸிஎண் வாங்க லஞ்சம் கொடுக்கின்றனர். தாமதத்தைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். சட்டத்தை வளைத்துப் போடுவதற்காக லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். அடுத்தவன் உரிமையைப் பறிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கின்றனர். ஆகவேமக்கள் மத்தியில் ஊழல் இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும். மக்கள் பொறுப்பு என்னநல்லவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதைச் செய்யலாம் தானே. நோட்டுக்கு ஓட்டு போட்டால்நல்லவர்கள் எப்படி உருவாவர்இருப்பவர்களில் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்அவ்வளவுதான். அதற்குமேல் நம்மால் இயலாது. அடுத்தபடியாகநாம் செய்ய வேண்டிய பணிவீட்டில் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவது. "ஊழல் செய்வது தவறுஏமாற்றுவது குற்றம்அநியாயமாகச் சம்பாதிப்பது பாவம்என குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால்அடுத்த தலைமுறையாவது சரியாக இருக்கும். நாம் நடத்தும் கல்விக்கூடங்களிலே இந்த விழும விதைகளை விதைக்கலாம் அல்லவா... அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

ஊழலுக்கு எதிராக பெரியளவில் கருத்துருவாக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு ஊடகத்துறைக்கு உள்ளது. ஊழல்வாதிகளைக் கண்டித்து எழுதுவது மட்டுமல்லஊழல் செய்வது கேவலம்அவமானம்சுயமரியாதைக்கு இழுக்கு என்ற எண்ணத்தைமக்களின் மனங்களில் ஆழமாக ஊடகங்கள் விதைக்க வேண்டும். ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும். பொறி வைத்துப் பிடிக்க வேண்டும். அப்போது தான் ஊழல்வாதிகள் பயப்படுவர். அதிகம் தவறு செய்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் பணிக்கலாசாரத்தைப் பற்றி எந்தத் தலைவராவதுதொழிற்சங்கமாவது பேசியதுண்டா? "வாங்குற சம்பளத்துக்கு உழைக்கணும்ஊழல் செய்யக் கூடாதுஎன பேசிய தலைவர்கள் எவராவது உண்டாஇந்தப் பொறுப்புதொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உண்டு. ஆன்மிகவாதிகளுக்கும் பொறுப்பு உள்ளது. ஒழுக்கம் என்பதுஆன்மிகத்தின் மிக முக்கியமான பகுதி. ஆன்மிகவாதிகள் என்றால் வழிபாட்டுத் தலங்களில் உட்கார்ந்துஆசி வழங்குவது தான் வேலையாபிரார்த்தனைகளையும்ஜெபங்களையும்து ஆக்களையும் ஓதுவது தான் அவர்களுடைய பணியாமக்களின் உள்ளங்களை நேர்மைப்படுத்தும் பொறுப்புஅவர்களுக்கு இல்லையாஆகவேஅத்தனை பேரும் ஒன்று சேர்ந்துஇப்பணியைச் செய்ய வேண்டும்.

நாங்கள் மருத்துவம் படிக்க விண்ணப்பம் செய்தபோது, "இன்டர்வியூமுறை இருந்தது. "இன்டர்வியூ'வில்அதிகாரி விரும்பியபடி மதிப்பெண் போட்டுக்கொள்ளலாம். அதன் பிறகு எம்.ஜி.ஆர்.தான் நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வந்தார். அதோடுமருத்துவத் துறையில் ஊழல் ஒழிந்தது. ஜாதிச் சான்றிதழைப் பள்ளிக்கூடத்திலேயே வழங்க வேண்டும் என்ற முறைஇப்போது வந்துள்ளது. ஆன்-லைனில் எல்லா சான்றிதழ்களையும் பெற முடியும் எனும் நிலை வந்துள்ளது. இப்படி நடவடிக்கைகள் எடுத்தால்மாற்றங்கள் உருவாக வாய்ப்புள்ளது. நீதிமன்றச் சீர்திருத்தம் தேவை. இன்று ஏன் ஊழல் வழக்குகளோடு நீதிமன்றத்திற்குப் போக முடியவில்லைதகப்பன் காலத்தில் வழக்குப் போட்டால்தனயன் காலத்தில் தீர்ப்பு வரும்மிக அதிகமாக செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே இவற்றிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். காவல் துறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அக்கவுன்டபிலிட்டி - பதில் சொல்ல வேண்டும் என்ற நிலையைஎல்லா துறையிலும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு அரசு நிறுவனமும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் எனும் நிலை இருக்குமானால்மாற்றங்கள் வரும்.
"தட்டிக் கேட்பதாதட்டிக் கேட்டால் உயிரையே தட்டிச்சென்றுவிடுவர். மதுரையிலே லீலாவதிக்கு நேர்ந்த கதி உங்களுக்கெல்லாம் தெரியாதா?' என நீங்கள் கேட்பது புரிகிறதுஉண்மை தான். ஒரு குழுவாகஅமைப்பாக இருந்து தட்டிக்கேட்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். ஊழல்வாதிகளை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும். இடமாற்றம் செய்வதுதீர்வு கிடையாது. ராஜாஜியிடம் ஒரு வழக்கு கொண்டு வரப்பட்டது. "இவர் எங்கள் ஊரில் ஊழல் செய்கிறார். இவரை வேறு இடத்திற்கு மாற்றவும்என்றனர். "ஊழலை ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாற்றச் சொல்கிறீர்களா?' எனக் கேட்டார் ராஜாஜி. இது ஒரு தண்டனையா? "அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால்தண்டனை அளிப்போம்என்றார் அவர். ஒழுக்கமுள்ள மனிதர்களைநேர்மையாக வாழும் மனிதர்களை உருவாக்காத வரைஊழலை ஒழிக்கவே முடியாது. நீங்கள் போடுகிற ஊழல் தடுப்பு ஆணையர்லோக்பாலைக் கண்காணிக்கிற அதிகாரிசி.ஏ.ஜி., - சி.பி.ஐ.யாராக வைத்துக் கொள்ளுங்கள்... அவர்கள் ஊழல்வாதியாக இருந்தால் என்ன செய்ய முடியும்? "இறைவன் இருக்கிறான்அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்என்ற உணர்வைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும்ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். எல்லாரையும் மாற்றுவோம்எல்லாவற்றையும் மாற்றுவோம்.